வியாழன், 30 மே, 2013

புரட்சி என்ற சொல்லுக்கு....

                                                                 "புரட்சி" என்ற சொல்லை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். எனக்கு பிடித்ததொரு சொல்லாக நான் கருதுவது "புரட்சி"யைத் தான். வெறும் சொல்லாக மட்டுமில்லை, அதை செய்யவும் துணிந்து நிற்கும் பிள்ளையாக என்னை வளர்த்துக்கொள்ளவும் எப்போது அணியமாகவே உள்ளேன். 
                                                                        உலகின் புரட்சிகளைப் புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வியந்துகொண்டு திரியும் வெற்று பகட்டுக்காரனாக மட்டும் இருப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. இளைய பிள்ளைகள், புரட்சியைப் படிப்பவர்களாக மட்டும் இல்லாமல் படைப்பவர்களாகவும் இருக்கவேண்டும். மக்கள் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் பங்கேற்பாளர்களாகவும் இருக்கவேண்டும். 
                                                              புரட்சி என்ற சொல்லுக்கு புரட்டிப்போடுவது என்று பொருள். இதுவரை நடக்கும் தவற்றைப் பொறுத்துக்கொள்ள வழியில்லாதபோது பாதிக்கப்பட்டவர்கள் தன்னெழுச்சியாக தடைகள் அனைத்தையும் புரட்டிப்போட முன்வருவது தான் புரட்சி! சரி! புரட்சியைப் பற்றி பலர் பலவற்றைக் கூறியுள்ளனர். அதை பார்க்கலாம்!!!

*====>அடிமைப்பட்ட இனத்தில் ஒரே காலத்தில் எல்லோர்க்கும் விடுதலைச் சிந்தனைகள் உருவாவதில்லை. புரட்சி முதலில் தனி மனிதனின் மனதிலிருந்து தோன்றுகிறது.

*====>புரட்சி எப்போது ஏற்படுகிறது? லெனின் அளிக்கும் விளக்கம் இது. "இதுவரை வாழ்ந்தது போல் இனி மேற்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு கோடானுகோடி மக்கள் வரும்பொழுது புரட்சிகள் வருகின்றன".

*====>புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன்மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

பின்பு அவர் இப்படி சொல்கிறார்.

*===="வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்".

*====>"புரட்சிகள் கட்டளைப்படி நடப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தையொட்டி நடப்பதுமில்லை. அவை வரலாற்றுப் போக்கில் முதிர்ச்சியடைகின்றன. பல்வேறு உள்நாட்டு, அயல்நாட்டு காரணங்களைப் பொறுத்து உரிய நேரத்தில் வெடிக்கின்றன" என்கிறார் லெனின்.

*====> மார்க்சியத்தைப் பொருத்தவரை புரட்சி பல வகைப்படும். சமூகப் புரட்சி, சோச‌லிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி, பாட்டாளிப் புரட்சி, பாட்டாளிய ச‌னநாயகப் புரட்சி மற்றும் மக்கள் ச‌னநாயகப் புரட்சி. ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறை இருக்கிறது. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தத்துவம் இருக்கிறது.

*====> தந்தை பெரியாரிடம் புரட்சி என்றால் என்ன? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இது. "வெறுங்காலோடு நடந்து செல்பவன் செருப்பணிந்து சென்றால் அது புரட்சி!".


                                                                அடிப்படை மாற்றம் என்பதன் சமூக அறிவியல் பெயரே "புரட்சி". போராடுகிறவன் போராளி. போராளிகளை உருவாக்குபவன் புரட்சியாளன். போராளிக்கு இலக்கை எட்டும் வேகமும் எதையும் செய்யத்துணியும் துணிச்சலும் தேவை. புரட்சியாளனுக்கு காலப்புரிதலும் வழிநடத்தலும் தேவை. 

                                                                  நான் படித்து தெரிந்த புரட்சியைவிடவும் நான் பார்த்து தெரிந்த புரட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த மண்ணின் மக்கள் தன்னெழுச்சியாக கூடி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பது உண்மையில் மிகப்பெரும் மக்கள் புரட்சியாகப் பார்க்கிறேன். 
                                                          தமிழ்மண்ணில் மாணவர்கள் புரட்சியின் ஊன்றுகோலாக இருந்து வந்திருப்பது வரலாற்றின் உண்மை. மொழிப்போர் காலகட்டத்திலும் சரி அதன் பின் தற்போது ஏற்பட்ட "தனி ஈழக்" கோரிக்கை போராட்டத்திலும் சரி மானமுள்ள தமிழ்ச்சாதி வீறுகொண்டு எழுந்தது காலத்தின் கட்டாயம். இது தான் புரட்சி! 
                                                         ஐந்நூறு பேர் வாழ்கின்ற ஊரில் ஐந்து பேர்கள் போராடினால் அது போராட்டம்(ஆர்ப்பாட்டம்). குறைந்தது முந்நூறு பேர்கள் போராட வந்தால் அது தான் புரட்சி!. 
                                                           சீர்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் வேறுபாடுண்டு.  ஒரு செயலின் சீரான தன்மையைத் திருத்துவது, சீர்திருத்தம். அந்த செயலையே அடிப்படையாய் மாற்றிச் செய்வது, புரட்சி! பழுதடைந்த கட்டடத்தைப் பழுதுபார்ப்பது, சீர்திருத்தம். பழுதடைந்த கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவது, புரட்சி! 
                                                             ஒரு செம்மையான கருத்து ஒரே நேரங்களில், பலர் மனங்களில் விதைக்கப்படுவது கூட புரட்சியாகத் தான் கருதப்படும். அதை கருத்தியல் புரட்சி என்றழைக்கலாம். களத்தில் புரட்சி ஏற்படும் முன் கருத்தியல் புரட்சி ஏற்படவேண்டும். 
                                                               ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத வறுமையுள்ள நாட்டில் ஒரு கூட்டம் கேளிக்கைக்கு கோடி கோடியாய் கொட்டி செலவழிக்கிறதென்றால் அதை கேட்க வக்கில்லாது வாய் பொத்தி போனால் அது கோழைத்தனமன்றோ? ஏழையாக வாழ்பவன் உண்மையில் கோழையே! 
                                                                முதலாளித்துவத்தைத் தகர்க்கத் தெரியாதவன் ஏழையாக வாழ்வது கோழைத்தனம் தானே? ஒரு சிலர் பொருளாதாரத்தைக் குவிப்பது என்பது பொருளாதாரச் சுரண்டலே ஒழிய, அதை பொருளியல் திறமை என்று மெச்சிக்கொள்ள முடியாது. சரி! இதுபற்றி நாம் இன்னொரு பதிவில் காணலாம். புரட்சியின் சிந்தனைகளை உள்வாங்கி, உள்வாங்கிய சிந்தனைகளை ஆய்வு செய்து, ஆய்வு செய்த சிந்தனைகளை அறியாதாரிடத்தில் பரப்புரை செய்து களத்தைத் தேர்ந்தெடுப்போம்!!! அனைவருக்கும் புரட்சி வணக்கங்கள்...!!!

பெருமைமிகு தமிழினமே! பேரறிவு கொள்வாயோ!!!

                                                       தற்போது நாம் நிறுத்தல் அளவீடுகளுக்கும் நீள அளவீடுகளுக்கும் கால அளவீடுகளுக்கும் உலகளாவிய அளவுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவையெல்லாம் ஆங்கிலவழி அளவுகளாக உள்ளன. உலகந்தழுவிய பார்வைக்கு அவை தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேவேளை நமது தமிழிலும் நமது முன்னோர்கள் தமிழ் அளவைகளைக் கொண்டு வரையறுத்துள்ளனர். 
                                                          இப்போது உலகம் கண்டறிந்த அளவைகளுக்கெல்லாம் மூத்ததாகவும் இவைகளைவிடவும் துல்லியமாகவும் தமிழ் அளவைகள் உள்ளன என்பதை அறியும் போது உள்ளம் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறது. படித்துப் பாருங்கள் செந்தமிழ்ச்சொந்தங்களே! வீடுகளில் நமது பாட்டனோ, பாட்டியோ சொல்லியது நினைவுக்கு வரலாம். உலகளாவிய அளவைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். நல்லது. அதேவேளை தமிழின் அளவைகளையும் தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள். உங்களைச் சுற்றியுள்ளோரில் உங்களுக்கு மட்டும் இவையெல்லாம் தெரிந்திருப்பது சிறப்பு தானே!

நிறுத்தல் அளவுகள்:
***************************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
            "குன்றிமணி", "வீசை" அளவைகளை இதற்குமுன் கேட்டதுபோல் இருக்குமே! "பாரம்" தாங்காமல் கீழே போட்டான் என்ற சொற்றொடரும் நினைவுக்கு வருகிறதா?

நீள அளவுகள்:
***************************
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்
4 காதம் - 1 யோசனை
      உலகின் மிக நுண்ணியது அணு என்று இப்போதுள்ள அறிஞர்கள் கண்டறிந்து வியந்தனர். இதை கேள்விபட்டு தமிழ்ச்சாதியும் வியந்தது. ஆனால் இதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் அதை பயன்படுத்திவந்துள்ளனர் என்பது எவ்வளவு பெருமை!? ஆனால் அதை எல்லாம் தமிழர்கள் புறந்தள்ளிவிட்டு மேற்கு உலகம் தற்போது கண்டறிந்த அளவைகளைக் கொண்டாடிவருவது வரலாற்றுப் பிழை அல்லவா?
                   காதமும் யோசனையுமே இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத  தூரம் என்பது 8 முதல் 16 கிலோமீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. (ஆறைங்காதம் நம்மகநாட்டும்பர் - சிலப்பதிகாரம்) யோசனை என்பது நான்கு காதம் அல்லது குரோசமாக இருக்கலாம் எனவும், ஏறத்தாழ 24-26 கிலோமீட்டர் நீளமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. (ஒரு நூற்று நாற்பது யோசனை – சிலப்பதிகாரம், நாலாயிரம் நவயோசனை நளிவண் திசை எவையும் (கம்பராமாயணம்)
                        மாதவி தனது நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய மேடையை கட்டுவதுபற்றிய சிலப்பதிகாரப் பாடலில் விரல், சாண், கோல் போன்ற பல நீள அளவைப் பெயர்கள் வருகின்றன.

“கண்ணிடை ஒருசாண் வளர்ந்து கொண்டு
நூநெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவிருபத்து நால்விரலாக
எழுகோலாகலத் தெண்கோல் நீளத்
தொருகோல்உயரத் துறுப்பினதாக்கி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய
தொற்றிய அரங்கினில் தொழுதனரேத்த...”
‍   (அரங்கேற்றுக்காதை)
                நம்முன்னோர்கள் இப்படி  உலகின் மூத்த நாகரிக இனமாக வாழ்ந்ததை மறந்து அந்நியர்களின் அறிவை வியந்து வாழ்தல் தவறன்றோ தமிழினமே! காலத்தின் கொடுமையன்றோ! காலம் என்றதும் கால அளவைகளும் நினைவுக்கு வருகின்றது.

கால அளவுகள்:
***************************
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
7/5 ஓரை = 1 நல்வேளை
2 நல்வேளை = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
                 இப்படி தோண்ட, தோண்ட புதையல் கிடைத்துக்கொண்டே இருக்கும். புதையல் ஒத்த மொழியை ஒதுக்கிவிட்டு மேற்பூச்சு பூசிக்கொண்ட மொழிகளைக் கொண்டாடுவோரை என்ன சொல்லி திட்டுவது? மின்னுவதெல்லாம் பொன்னல்ல! தொன்மைவாய்ந்த தமிழ்மொழியில் பல ஆண்டுகளின் தூசு படிந்து கிடக்கிறது. அதை துப்புரவு செய்யவேண்டியது நமது ஒருவொருவரின் கட்டாயப் பணி.!!! புதியதைக் கற்பது அறிவென்றால், மறைந்துபோனதை மீட்டெடுத்து கற்பதும் கற்றுக்கொடுப்பதும் பேரறிவன்றோ!


                             பெருமைமிகு தமிழினமே! பேரறிவு கொள்வாயோ!!!

புதன், 29 மே, 2013

தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்...

                                                         தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று தமிழ்த்தேசியவாதிகள் சொல்லும்போதெல்லாம் அதை ஏளனமாகப் பார்க்கும் அறிவுக்கொழுந்துகளே! உங்கள் பிள்ளைகளுக்கு வடமொழிச்சொற்களில் பெயர்வைக்கிறீர்களே, அதன் பொருள் தெரிந்துதான் செய்கிறீர்களா? இல்லையே! சிலர் சொல்லலாம், நான் இணையத்தில் பார்த்துதான் பிள்ளைக்குப் பெயர் சூட்டினேன் என்று. அது உண்மைதான் என்று நீங்கள் ஆராய்ந்ததுண்டா? அதில் எந்தபிழையும் இல்லை என்று உங்களால் கண்டிப்பாக சொல்லமுடியுமா?
                                                              மகிசன்,மகிசா என்று பெயர் வைக்கின்றனர். இது உச்சரிப்புக்கு "அழகாக" இருக்கிறதோ? இல்லை, இணையத்தில் சரியான பொருள் பார்த்துதான் பெயர்வைத்து உள்ளனரோ? இருக்கலாம் என்றால் அப்பெயர்களின் பொருளைப் பார்த்துவிடுவோமா?
                                                              மகிசன், மகிசா என்றால் எருமை என்று பொருள். தாம் பெற்ற பிள்ளைகளுக்கு எருமை மாடு என்றா பெயர்வைப்பீர்கள்? அடக்கொடுமையே!
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போமா?
                                                                  பல பெண்பிள்ளைகளுக்கு "ஆர்த்தி" என்று பெயர்வைத்துள்ளனர். இதன் பொருளாக பலரும் எண்ணிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பது "ஆர்த்தி என்றால் ஆரத்தி என்று". ஆனால் அது தவறு. ஆரத்திக்கும் ஆர்த்திக்கும் வேறுபாடுண்டு.
                                                                  ஆர்த்தி என்றால் சமக்கிருத்தத்தில் "அவலட்சணம்" என்று பொருள். தமிழில் சொல்வதாய் இருந்தால் "அழகற்ற பெண்" என்று பொருள். தாம் பெற்ற பிள்ளையை அழகற்றவள் என்று சொல்வதே சரியில்லாத ஒன்று. ஆனால் அதை அந்த குழந்தைக்கு பெயராகவே வைத்தும் இழிவுபடுத்துவது எவ்வளவு பெரிய கொடுமை...???
                                                                      இது மட்டுமா தோழர்களே, இதை விடவும் ஒரு மிகப்பெரும் தவற்றை செய்துவந்துள்ளனர், செய்துவருகின்றனர்...
                                                                        "லிங்கம்" என்ற பெயர் சிற்றூர்களில் பரவலாக பெயர்சூட்டுவதில் பயன்படுத்தப்படுகிறது. லிங்கம் என்றால் என்ன பொருள் என்று தெரியாமல் யாரும் ஊரில் பெயர்சூட்டுவதில்லை. அதை கடவுள் பெயர் என்று நினைத்துதான் சூட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிடுகின்ற கடவுளே ஆபாசமான சொற்களாலும் கதைகளாலும் தான் சொல்லப்பட்டுள்ளது.சரி இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்இப்போது லிங்கம் என்றால் என்ன பொருள்? "ஆண் அந்தரங்க உறுப்பு" தான் சமக்கிருதத்தில் "லிங்கம்" என்று சொல்லப்படுகின்றது. தாம் பெற்ற பிள்ளைக்கு "ஆண்குறி" என்றா பெயர்வைப்பர்? ஊரே அவனை அப்படித்தானே சொல்லி அழைக்கும்? இது அசிங்கமான செயல் இல்லையா? அதிலும் ஒரு சிலர் ஒருபடிமேலே போய்
"மகாலிங்கம்" என்று பெயர்வைக்கின்றனர்... மகா என்றால் "பெரிய" என்று பொருள். கொடுமையடா தமிழா! பெற்ற பிள்ளையைப் "பெரிய சு***" என்றா அழைப்பது? இன்னும் சிலர் "சுந்தரலிங்கம், சுந்தரமகாலிங்கம்" என்றும் பெயர் வைக்கின்றனர். "அழகான பெரிய சு***"...??? இப்படித்தான் பெயர் இருக்கவேண்டும்... கேவலமடா கேவலம்...!!!
                                                                 இந்த இழிவுகளை எல்லாம் ஏன் செய்யவேண்டும்? உங்கள் மொழி தாய்மொழி தமிழில் நல்ல பெயரே இல்லையோ? தாயை மதிக்காமல், திரையில் அம்மணமாக ஆட்டம்போடும் நடிகைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் கூட்டம்தானே நீங்கள்? உங்களுக்கு தாய்மொழியில் பெயர்வைக்க தயக்கமாகத்தான் இருக்கும். அப்படி தயங்கும் எவனிடமும் யாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. நீ எக்கேடும் கெட்டுப் போ...!!! ஆனால் ஒன்று, நாளை உன் பிள்ளைக்கு அவன்/அவள் பெயரின் உண்மைப் பொருள் தெரியத்தான் போகிறது. அப்போது அவர்கள் உங்களைச் செருப்பால் அடிக்கத் துரத்துவார்கள்...! ஜாக்கிரதை! நீ வாங்கித் தரும் செருப்பாகக் கூட இருக்கலாம்...!!!! என் சொற்கள் அதிகமாய் கோபத்தை வெளிப்படுத்தும். இப்படியெல்லாம் எம் இனத்தில், மொழியில் நிகழும் இன்னல்களை, இழிவுகளை வெட்டி வீழ்த்த வேண்டிய கடமை எமக்கு அதிகமாகவே இருப்பதாக உணர்வதால் வேகமாக களமாடுவதன் விளைவு கோபமாகத் தான் வெளிப்படும்...! வெறுமனே கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டுக்கொள்ள முடியாது... இது தவறான ஒன்று என்று என்னை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தவறு செய்பவர்களைத் திருத்துங்கள்...!!!  
                     சரி! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்வையுங்கள்! உங்கள் பெயர் தமிழில் இல்லை என்றால் தமிழில் மாற்றுங்கள்! உங்களைத் தமிழர் என்று அடையாளப்படுத்தும் வழிகளில் பெயரும் ஒன்று! எவரும் உங்களிடம் அறிமுகம் ஆகும்போது முதலில் உங்கள் பெயரைத் தான் கேட்பார்கள்! சொல்லும் உங்கள் பெயர் தான் உங்களை அடையாளப்படுத்தும்! "தமிழ்த்தேசியம்" என்பது இதிலிருந்து தான் தொடங்கும்... உங்கள் பெயர்களில் தமிழ்ச்சொற்கள் தாங்கினால் நீங்களும் ஒரு தமிழ்த்தாங்கி தான்....!!!

திருமணத்தின் போது பார்ப்பனர் சொல்லும் மந்திரமும் பொருளும்

                                                 எந்த நிகழ்வாக இருந்தாலும் பார்ப்பனர்களை அழைத்துவந்து தான் நடத்தவேண்டுமென்று மூடப்பழக்கத்தை இன்னும் விடாப்பிடியாக கடைபிடிக்கும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அறிவாளிகளே!அடேய்! படித்த முட்டாள்களே! எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயாமல் செயல்படும் உங்களை என்ன சொல்லி திட்டுவதென்று தெரியவில்லை. இதை படித்துப் பாருங்கள்...! உங்களுக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் இருக்கிறதா என்று பார்ப்போம். இதை ஆபாசமான பதிவு என்று நினைக்க முடியாது. இதை வெளிப்படையாக சொல்லித்தான் நடக்கப்போகும் எல்லா ஆபாசத்தையும் தடுக்கமுடியும்.
ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள 85ஆம் சூக்தம்
பெயர்: விவாகசூக்தம்
இதில் 47 சூத்திரங்கள் உள்ளன.
முப்பத்தேழாவது சூத்திரத்தின் முற்பகுதியில் வரும் வரிகள்
தாம் பூசன் சிவதமாம் ஏரய்ஸ்வ

யஸ்யாம் பீஜம் மனுஸ்யா வபந்தி

யா நஊரு உசதீ விஸ்ரயா தே

யஸ்யாம் உசம்தஹ் ப்ரஹராமசேபம்
பொருள்: பூசன் தேவனே, எவளிடத்தில் சந்தான விதையை
மனிதர்கள் விதைக்கிறார்களே எவள் நம்முடைய தொடையுடன்
சங்கமத்தை விரும்பி ஆதரிக்கிறாளோ எவளிடத்தில் நம்முடைய
லிங்கம் தட்டுகின்றதோ அவள் நம்மைக் காதலிக்குமாறு செய்துவிடு
(கவனிக்க - இது விபச்சாரத்திற்கான பிரார்த்தனை அல்லவா..?)
துப்யம் அக்ரே ப்ர்யவஹன் சூர்யாம் வஹதுநா சஹ

புனஹ் பதிப்யோ ஜாயாம் தா அக்னே ப்ரஜயா சஹ



பொருள்: இப்பெண்ணை முதலில் அக்னி பகவான் (அக்னி என்பது பிராமணியத்தின் அடையாளம், அக்னி புரோகிதர்களின் பிரதிநிதி) திருமணம்செய்து கொண்டு அவளுடன் குடும்பம் நடத்தினான். அப்படிப்பட்டவளை குழந்தை குட்டிகளுடன் நமக்குத் திருப்பிக் கொடுத்தருள்க



சோமஹ் ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தரஹ்

த்ருதியோ அக்னிஹ்தே பதிஹ் துரியஸ்தே மனுஸ்ய ஜாஹ்

சோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே

ரயிம் புத்ரன் அதாத் அக்னிஹ் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: .. பெண்ணே. உன்னை முதலில் சோமன்
பெற்றுக் கொண்டான். அதன் பிறகு கந்தர்வன் பெற்றுக்
கொண்டான். அக்னி உனது மூன்றாவது புருசன்.
நான்கவது ஆள் இந்த மனிதன்.
முக்கியமானதொன்றை இங்கே கவனிக்க....
மேற்கண்ட 'சோமஹ்' மந்திரத்தைப் புரோகிதன் சொன்னவுடன்
மணமகள் அதனை ஏற்றுக்கொண்டு சொல்லும் மந்திரம்
பின்வருமாறு:
'இக்கன்னிப் பெண்ணை முதலில் சோமன் கந்தர்வனுக்குக்
கொடுத்தான். அதன் பிறகு கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான்.
கடைசியில் அக்னி இவளை எனக்குக் கொடுத்தான். இவளுடன்
செல்வத்தையும் ஆண் குழந்தைகளையும் கொடுத்தான்.
உத் ஈஸ்வாதஹ் பதிவதீ ஹி ஏஸா

விஸ்வாவசும் நமசா கீர்பிஹ் ஈளே

அன்யாம் இச்ச பித்ருசதம் வ்யக்தாம்

தே பாகோ ஜனுசா தஸ்யா வித்தி



உத்ஈர்ஸ்வ அதோ விஸ்வாவசோ

நமசா ஈளாமஹத்வா

அன்யாம் இச்ச ப்ரபர்வ்யம் சம்

ஜாயாம் பத்யா ஸ்ருஜ
பொருள்: திருமணத்தின் வணங்கப்படும் கந்தர்வனே, இந்த
கன்னிப் பெண் திருமணம் செய்துகொண்டு தன்னுடைய கணவனுடன்
இசைந்துள்ளாள். ஆகவே நீ இவ்விடத்தைவிட்டு எழுந்துசெல். தந்தையின்
வீட்டில் திருமணம் ஆகாது இருக்கும் கன்னிப்பெண்கள் மட்டுமே உனக்கு சேரவேண்டியவர்கள் என்பதை நீ தெரிந்துகொள்க. அழகி பெருத்த பின்பகுதிகளைக் கொண்ட வேறு கன்னிப்பெண்ணை வைத்துக் கொள்.
                                                இப்படித்தான் அந்த பார்ப்பன நாய்கள் நம்மை இழிவுபடுத்தி வருகின்றனர். இனி அவர்களைக் குறைசொல்லி ஒன்றுமில்லை. இதை தெரிந்தபின்னும் அந்த பார்ப்பன நாய்களைக் கூப்பிட்டு திருமணமோ, ஏதேனும் ஒரு நிகழ்வோ நடத்தினால் கூப்பிட்ட உங்களைத் தான் எதைக கொண்டு அடிக்கவோ...??? எந்த மொழியில் அசிங்கப்படுத்தினாலும் அசிங்கம் தானே? சமக்கிருதம் தெரியாமல் எந்த பார்ப்பானும் வருவதில்லை. சமக்கிருதம் தெரிந்ததென்றால் அதன் பொருளும் தெரியத்தானே செய்யும்? அப்படி துணிச்சலாக வந்து உங்களை இழிவுபடுத்திச் செல்லும் அந்த பார்ப்பன நாய்களை இனி எந்த திருமண நிகழ்விலாவது பார்த்தால் என்ன செய்ய போகிறீர்கள்? செருப்பு அணிந்துதானே செல்வீர்கள்? அப்புறம் என்ன, கழற்றி அடிக்கவேண்டியது தான்...!!!

தமிழ்ப்பெயர்கள்

                                                பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதில் தூய தமிழ்ப்பெயர்கள் என்றால் பலருக்கு ஒவ்வாமையாக உள்ளது. அது ஏனென்று தெரியவில்லை. உலகில் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எம் தாய்மொழி தமிழ் தோன்றி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழுக்கு முன் தோன்றிய மொழிகள் எல்லாம் எழுத்துவடிவம் இல்லாது காலப்போக்கில் அழிந்தும் போய்விட்டன. ஆனால், பல அந்நியர்களின் படையெடுப்பிற்கு பின்னும் ஆட்சிக்கு பின்னும் எம் தாய்மொழி தமிழ் இன்னும் உயிர்த்து வாழ்கிறது. மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைமிக்க மொழி வாசிப்பிற்கு பழைமையாகத் தான் தோன்றும். பெற்ற தாய் பழைமையாக, வயதாகத் தோன்றுகிறாள் என்பதற்காக அவளை ஒதுக்கிவைப்பது சரியா? தமிழரே தமது தாய்மொழியைத் தள்ளிவைத்தால் எப்படி? என்ற கேள்வி எல்லாத் தமிழர் நெஞ்சிலும் எழவேண்டும். என் சிந்தையில் தோன்றிய சில தமிழ்ப்பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளேன்.
__________________________________________________________________
1)தமிழ்ப்புகழேந்தி இளநிலவன்
2)சமர்ப்புலி வீரன்
3)எழிலன் எல்லாளன்
4)தீந்தமிழ்த்தீரன்
5)வாஞ்சைகொள் வந்தியத்தேவன்
6)விழி எழிலாள்
7)கவின்மிகு கயல்விழி
8)நிலவுமொழி அன்பரசி
9)திங்கள்முக தங்கவிழி
10)மயிலரசி மகிழினி
11)பைந்தமிழ்ச் செந்தளிர்
12)தமிழிளநிலா
13)தேனினித்தென்னரசி
14)புன்னகைப் பூங்கோதை
15)ஆற்றல் செழியன்
16)அன்புத்தமிழ் மொழியன்
17)விடுதலை அரசன்
18)செந்தமிழ்ச் சோழன்
19)பாண்டியத் தேவன்
20)பாண்டியச் சோழன்
21)இனிய இளங்கோவன்
22)மறத்தமிழ் வேந்தன்
23)கதிரவன் கவியரசன்
24)இயல்
25)இசை
26)இயலிசை
27)பூந்தளிர் புகழ்ச்செல்வி
28)அமுதமொழி அனிச்சயா
29)கதிர் ஓவியா
30)நறுமுகை நந்தினி
_______________________________________________________________________