புதன், 26 ஜூன், 2013

:::உணவுகளின் தமிழ்ப்பெயர்கள்:::


                 எனது முகநூல் பக்கத்தில் நண்பர் இளஞ்சித்திரன் வெளியிட்ட ஒரு தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழாக பேச விரும்பும் எனக்கு அமுதம்போல் கிட்டியது. யாம் பெற்ற இன்பத்தை யாவரும் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே பதிவிடுகிறேன்...!!! 

                 நான் கடைகளில் சென்று பொருள்கள் வாங்கும் போது தனித்தமிழில் பொருள்களின் பெயரைச் சொல்லி வாங்குவதுண்டு. பெயர் தெரியாதெனினும் நானாகவே ஒரு பெயர் வைத்துக்கொள்வேன். ஏனெனில் தவறாகச் சொன்னாலும் அதை எம் தமிழிலேயே சொல்லவேண்டும் என்ற செருக்கு தான். இருந்தாலும் சிலவற்றிற்கு பெயர் தெரியாமல், என்னால் எவ்வளவு முயன்றும் பெயரைத் தேர்ந்தெடுக்க இயலாமல் கடைக்காரரிடம் "அதை கொடுங்கள்", "இதை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி வந்ததுமுண்டு. ஆனால் இனிமேல் நான் அப்படி சொல்லத்தேவையில்லை. இதோ அந்த பதிவு:::::::
---------------------------------------------------------------------------------------------------------------------------------
டீ  - தேநீர்

காப்பி  - குளம்பி

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு, பனிப்பாலேடு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு,குளிர் பானம்

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

பேக்கரி -  வெதுப்பகம்



                   இந்த பதிவு உணவுப்பிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த உணவுகளின் தமிழ்ப்பெயர்கள் இருந்தால் பதிவிடவும். உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணும்போதும் எழுதும்போதும் தமிழே இருக்கட்டும்!!! அது தனியே இருக்கட்டும்!!!

உண்மையை உரக்கச் சொல்வோம் இந்த உலகினுக்கு....::::


தமிழா! நீ சில நூல்களைப் படித்திருப்பாய். அவைகளில் சில வரிகள் உனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கலாம். அதை நீ மறுபடியொருமுறை வாசித்துப் பார்த்து மனத்தில் சுவைத்திருக்கலாம். அவற்றினை நீ குறிப்பெடுக்கத் தவறியிருக்கலாம். நான் படித்த சில நூல்களில் என் தாய்மொழியைப் பற்றியும் என் இனமாம் தமிழர் பற்றியும் சிலர் கூறிய‌ உண்மைக்கூற்றுகளை இங்கே பதிவிடுதல் சிறப்பென்று கருதுகிறேன். இதோ எழுதுகிறேன், என்னுள்ளம்போல் உன்னுள்ளமும் உவகை கொள்ளுமென்ற நம்பிக்கையில்...!!!


கவிஞர் கண்ணதாசன்:

பாண்டியரின் வழி நீயா? இமயக் கோட்டில்
        பறந்திருந்த துன்கொடியா? இலங்கை நாட்டை
ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்க மண்ணை
        அதிரடித்த துன்குலமா? கடல்கள் மூன்றைத்
தாண்டியவர்கள் பரம்பரையா? புட்பகத்தில்
        சாவகத்தில் கொடிபோட்டான் பிள்ளையா நீ?
ஆண்ட வரலாற்றிற்கும் உன்றனுக்கும்
        அணுவளவும் தொடர்பில்லை எதற்கு வார்த்தை?
                        
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இராமச்சந்திர தீட்சிதர்:

உலகம் தோன்றிய காலத்தில் குழம்பாக இருந்த மண், முதலில் குளிர்ந்து அமைந்த நிலப்பகுதி தமிழர் வாழும் தென்பகுதியே ஆகும். இங்குதான் மனிதன் முதன்முதலில் தோன்றியிருக்கக் கூடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பேராசியர். பெத்தூர்க்கோர் தலைமையில் இரசிய ஆய்வுக்குழு அறிக்கையில்:

கடல் விழுங்கிய இலெமூரியாக் கண்டமே மனித இனத்தின் தொட்டில். அதன் மொழி, தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிக் வேதம்:

தமிழ்நாடு பெரிய கண்டம். பர்மா, தென்சீனா, தென்னாப்பிரிக்கா, இமயம், ஆத்திரேலியா வரை பரவி இருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிராசு பாதிரியார்:

மொகஞ்சோதரா மக்களின் மொழி, தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்சுமுல்லர்:

தமிழே மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரைட்சு டேவிட்சு:

வடமொழி, எபிரேயம்(Hebrew), கிரேக்கம் போன்ற இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மொழியறிஞர் காலின் மாசிகா:

தென்னாசியாவில் மிகப்பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதைமொழி இருந்துள்ளது. அதுவே தொல்தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

எகிப்து நாட்டு தாலமி,(கி.பி.119 இல்) தனது பூகோள நூலில்:

தமிழர் நாகரிகமே உலகில் சிறந்த நாகரிகம். தமிழர்கள் வடநாட்டு சந்திரகுப்தர் காலத்திலேயே கிரேக்க மன்னர்களோடு கடல் வாணிபம் செய்தனர்.முசிறி, தொண்டி போன்ற துறைமுகங்களில் நேரில் கண்டறிந்தேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பிளினி என்ற பயணி (கி.பி.79 இல்):

சங்கத்தமிழ் நூல்களுக்கு இணையான நூல்களை நான் வேறு எந்த நாட்டிலும் வேறு எந்த மொழியிலும் கண்டதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

லாசு ஏஞ்சல்சு டைம் என்ற செய்தித்தாளில் எட்வர்டு லான்சர் குறிப்பிட்டது(மே 22,1932):

மறைந்த இலெமூரியாக் கண்டத்தின் கடைசி மக்கள் தமிழர்களே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி.645 இல்):

தமிழ்த்துறைமுகங்களில் ரோம் நாட்டு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்டர் (Hunter) எழுதிய இந்தியா என்ற நூலில்:

தொலைநாடுகளில் எல்லாம் அன்று பேசப்பட்ட மொழி தமிழே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லூர் சுவாமி ஞானப் பாத தாசர்:

இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழிகளின் தோற்றத்திற்கானச் சான்றுகள் தமிழில் தான் கிட்டும்.


திங்கள், 24 ஜூன், 2013

தெரிந்துகொள்வோம்:::::(இரண்டு)


நாம் பேசும்போது எவை எவை தமிழ்ச்சொற்கள் என்றே தெரியாமல்தான் பேசுகிறோம். வேற்றுமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் தனித்தமிழில் பேசுவதற்கு நாம் பேச முனையும்முன் மொழிச்சொற்கள் பற்றிய அறிவு நமக்கு தேவையாகிறது. இந்த பதிவில் தமிழ் என்று நாம் கருதிய சில வடமொழிச்சொற்களை அடையாளங்கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களை தெரியபடுத்தியுள்ளேன். ஆங்கிலம் மட்டும்தான் வேற்றுமொழி அன்று, தமிழில்லாத எந்த மொழியும் வேற்றுமொழிதான். நான் வேற்றுமொழியை வெறுக்கச் சொல்லவில்லை. தாய்மொழி பேசும்போது வேற்றுமொழிச்சொற்களை மறுக்கவே சொல்கிறேன். அதற்கு இந்த பதிவு ஏதுவாக இருக்குமென்று உளமாக நம்புகிறேன்.


 வடசொல்      - தமிழ்ச்சொல்

அகங்காரம்     -   செருக்கு
அகதி          -   ஆதரவற்றவர்
அகிம்சை      -    ஊறு செய்யாமை
அங்கத்தினர்    -   உறுப்பினர்
அங்கீகாரம்     -   ஒப்புதல்
அசுத்தம்       -   துப்புரவின்மை
அதிகாரி       -   உயர் அலுவலர்
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்
அநீதி         -   முறையற்றது
அபயம்       -    அடைக்கலம்
அபிவிருத்தி   -   பெருவளர்ச்சி
அபிஷேகம்    -   திருமுழுக்கு
அபிப்பிராயம்  -   உட்கருத்து
அனுபவம் பட்டறிவு
ஆசிர்வாதம்  -   வாழ்த்து
சாதம்  -     சோறு
சுத்தம் -   துப்புரவு
காரியம்  - செயல்
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம்       - செயலகம்.
காரியதரிசி        - செயலர், செயலாளர்.
ஞாபகம்  நினைவு
இலட்சணம் - அழகு
அனுக்கிரகம்          - அருள் செய்தல்
ஆராதனை            - வழிபாடு
உற்சவம்             - விழா
கும்பாபிஷேகம்       - குடமுழுக்கு
கோத்திரம்            - குடி
சந்தியாவந்தனம்      - வேளை வழிபாடு
சரணம்              - அடைக்கலம்
சிவமதம்            - சிவநெறி
பஜனை              - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம்            - திருப்பொருள்
பிரகாரம்            - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம்  - வலம் வருதல்
பிரார்த்தனை        - நேர்த்திக்கடன்
மந்திரம்            - மறைமொழி
மார்க்கம்          - நெறி, வழி
விக்கிரகம்         - திருவுருவம்
யாத்திரை         - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள்     - திருப்பதிகள்
அபூர்வம்        - அருமை
அவகாசம்       - ஓய்வு
அவசரம்        - விரைவு
அவசியம்       - தேவை
அவயவம்       - உறுப்பு
ஆகாயம்        - வானம்
ஆபத்து         - துன்பம்
ஆன்மா          - உயிர்
இராகம்          - பண்
இரத்தம்         - குருதி
இலக்கம்         - எண்
உபத்திரவம்      - வேதனை
ஐக்கியம்         - ஒற்றுமை
கஷ்டம          - தொல்லை
கல்யாணம்       - திருமணம்
கிரயம்          - விலை
குதூகலம்       - எக்களிப்பு
கோஷ்டி        - குழாம்
சக்தி           - ஆற்றல்
சகஜம்         - வழக்கம்
சக்கரவர்த்தி    - பேரரசன்
சந்தேகம்      - ஐயம்
சபதம்         - சூள்
சந்தோஷம்    - மகிழ்ச்சி
சமீபம்        - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி        - வழித்தோன்றல்
சிகிச்சை      - மருத்துவமுறை
சந்தர்ப்பம்    - வாய்ப்பு
சம்பிரதாயம்  - தொன்மரபு
சாபம்        - கெடுமொழி
சாதாரண     - எளிதான
சாட்சி        - சான்று
சிங்காசனம்   - அரியணை
சிநேகம்      - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம்    - விடுதலை
சுயராஜ்யம்  - தன்னாட்சி
சுபாவம்     - இயல்பு
சேவ        - தொண்டு
சேஷ்டை    - குறும்பு
சௌகரியம்  - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம்            - வேட்கை
தேதி             - நாள்
திருப்தி           - உள நிறைவு
நஷ்டம          - இழப்பு
நிபுணர்          - வல்லுநர்
நியாயஸ்தலம   - வழக்கு மன்றம்
நீதி             - நன்னெறி
பகிரங்கம்        - வெளிப்படை
பரிகாசம்         - நகையாடல்
பத்தினி          - கற்பணங்கு
பத்திரிக்கை      - இதழ்
பரீட்சை         - தேர்வு
பந்துக்கள்        - உறவினர்கள்
பாரம்           - சுமை
பாஷை         - மொழி
பிரசாரம்        - பரப்புவேலை, பரப்புரை
பூர்வம்          - முந்திய
மரணம்         - சாவு, இறப்பு
மாமிசம்        - இறைச்சி
மிருகம்         - விலங்கு
முகூர்த்தம்     - நல்வேளை
மோசம        - கேடு
யந்திரம்        - பொறி
யாகம்         - வேள்வி
யுத்தம்         - போர்
ரகசியம்        - மறைபொருள், குட்டு, பூடகம்
ருசி            - சுவை
லாபம்          - மிகை ஊதியம்
வருஷம்        - ஆண்டு
வாகனம்        - ஊர்தி
வாதம்          - சொற்போர், சொல்லாடல்
வாந்தி பேதி     - கக்கல் கழிச்சல்
வாலிபர்         - இளைஞர்
விஷயம்        - பொருள், செய்தி
விபத்து         - துன்ப நிகழ்ச்சி
விவாகம்        - திருமணம்
வீரம்           - மறம்
வேகம்         - விரைவு
ஜனங்கள்       - மக்கள்
ஜயம்          - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம்       - பிறவி
ஸ்தாபனம்      - நிலையம், அமைப்பு


இவற்றில் சில வடசொற்கள் விடுபட்டிருக்கலாம். விடுபட்டவைகளைத் தேடிப்பிடித்து அடுத்த பதிவில் விடுகிறேன். இப்போது அரேபிய, பாரசீக சொற்கள் பற்றியும் நாம் அறிவது தேவையான ஒன்று. ஏனெனில் நாம் அரேபிய பாரசீக சொற்களையும் நமது பேச்சில் பயன்படுத்திக்கொண்டு அதனை செந்தமிழ் என்று ஏமாந்துகொண்டு இருக்கிறோம்.

அந்தஸ்த் - நிலைமை
அலாதி  -     தனி
ஆஜர்    -    வருகை
இஸ்திரிப் பெட்டி   -   துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார் விலை  -  ஒரே விலை
கஜானா     -   கருவூலம்
கம்மி    -     குறைவு
காலி -     நிரப்பப்படாமல் உள்ள நிலை, வெற்று
காலிப்பயல்  -  போக்கிலி
கிஸ்தி  -  வரி
கைதி  - சிறையாளி
சரகம்   -  எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார்   -    அரசு
சந்தா    -  கட்டணம்
சவால்  - அறைகூவல்
சாமான்   -  பண்டம்
சிபாரிசு   -  பரிந்துரை
சிப்பந்தி  -   வேலையாள்
சுமார்  - ஏறக்குறைய
ஜமீன்   -  நிலம்
ஜமீன்தார் -  நிலக்கிழார்
ஜாஸ்தி -   மிகுதி
ஜோடி  -  இணை
அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு
இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி
தயார் -  ஆயத்தம், அணியம்.
நகரம் ‍ -  பேரூர்
கிராமம் -  சிற்றூர்
இவற்றிலும் சில விடுபட்டிருக்கலாம். அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கும் தெரிந்த, இந்த பதிவில் விடுபட்ட சொற்களை பதிவிடலாம்.